Saturday, September 8, 2018

ஜக்கு & மக்கு.... ஸ்மைல் ப்ளீஸ்

*ஜக்கு:* என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?

*மக்கு:* ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!

*ஜக்கு:* பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?

*மக்கு:* இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.
---------------------------------------------------
*மக்கு:* இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!

*ஜக்கு:* ஏன் என்ன தப்பு செஞ்ச?

*மக்கு:* 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு

*ஜக்கு:* இது கூடதெரியலையா?

*மக்கு :* ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!
---------------------------------------------------
*மக்கு:* என் பையன் தங்கமானவன்டா!

*ஜக்கு:* எப்படி சொல்ற?

*மக்கு:* சிகரெட், தண்ணி, பொம்பள... எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.

*ஜக்கு:* உன் பையனுக்கு என்ன வயசு?

*மக்கு :* ஒரு வயசு.
---------------------------------------------------
*மனைவி :* - உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

*கணவன் :* - சொன்னேனே... மறந்துட்டியா...

*மனைவி :* - எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

*கணவன் :* - உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

*மனைவி :* -????????
---------------------------------------------------
*மனைவி :* நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

*கணவன் :* அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
---------------------------------------------------
*ஹோட்டல் ஓனர்:* "சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?"

*சர்தார்:* "மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!"
---------------------------------------------------
*TTR:* "எண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேரியா சென்னை வரைக்கும் வந்தே?"
*ஒருவன்*: "சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது.. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நெனச்சுத்தான் ஏறினேன்.."
---------------------------------------------------
*வாத்தியார்:* "ஏன்டா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற?"
*மாணவன்:* "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸ்க்கு மார்க் போடுவேன்னு.. அதான் சார்.."
*வாத்தியார்:* ….!!!!!

Saturday, February 17, 2018

சிரி... சிரி... சிரி

வாய் விட்டு சிரிங்க !
😆😅😆😅😆😅😆😅

😆   மனைவி : என்னங்க, கணவன் – மனைவி சொர்க்கத்துல சேர்ந்து வாழ முடியாதாமே..!

கணவன் : அதனால்தானடி அதை சொர்க்கம்னு சொல்றாங்க..!

😀😀😀😀😀😀😀😀

மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன் : நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

😀😀😀😀😀😀😀😀😀😀😁

மனைவி : ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன் : உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..

😀😀😀😀😀😀😀😀😀😀😀

மனைவி :- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன் :- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி :- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

கணவன் :- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி :-????????

😀😀😀😀😀😀😀😀😀😀😀

மனைவி : ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?

கணவன் : கனவுல அனுஷ்கா வந்தா..!

மனைவி : அப்பறம் ஏன் கத்துனீங்க.?

கணவன் : நடுவுல நீ வந்துட்ட..

😀😀😀😀😀😀😀😀😀😀😀

மனைவி : என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.

கணவன் : அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

😀😀😀😀😀😀😀😀😀😀😀

ம்னைவி : "என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கான்?"

கணவன் : "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

Friday, February 16, 2018

ரிலாக்ஸ் ப்ளீஸ்

பேராசிரியர்: சாப்ட் வேர்னா என்னா, ஹார்டு வேர்னா என்னா?
*
இவன்: செடியில உள்ளது சாப்ட் வேரு.. மரத்துல உள்ளது ஹார்டு வேரு.
😂😂😂😂

அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க.
*
இவர்: அப்ப மீதி பேர்?
*
அவர்: இன்னும் கல்யாணம் ஆகல!
😁😁😁😁

அவர்: டாக்டருக்கு நீட் தேர்வு வேணுமோ? வேண்டாமோ ?ஆனா, ஒரு தேர்வு அவசியம்.
*
இவர்: என்ன அது?
*
அவர்: நீட்டா ...எழுதத் தேர்வு. என்னா எழுதுறார்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது.!
😂😂😂😂

அவர்: அபராதத்திற்கும், வரிக்கும் வித்தியாசம் தெரியுமா?
*
இவர்: தெரியாது ,சொல்லுங்க.!
*
அவர்: தவறான செயலுக்கு தண்டம் கட்டுனா அபராதம்..
சரியான செயலுக்கு தண்டம் கட்டுனாஅது வரி.!
😂😂😂

அவன்: இதோ போறானே!அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல.
*
இவன்: எப்படிச் சொல்றீங்க?

அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்டான். புரூட் லாங்வேஜ்னு சொன்னா ,ஒத்துக்க மாட்றான்.
😂😂😂😂

டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க..
*
வந்தவர்: ஒரு பனியன்கூட... போட்ருக்ககூடாதா டாக்டர்.?
😂😂😂😂

கனவன்: என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு.?
*
மனைவி: நீங்கதானே சமையல்ல சேஞ்ச் வேனும்னு சொன்னீங்க.?!
😁😁😁😁

அவர்: அச்சனை உங்க பேருக்கா.?
*
இவர்: சாமி பேருக்கே பண்னுங்க.. எனக்கு தினம் வீட்டுலயே அர்ச்சனை நடக்குது.
😁😁😁😁😁

அவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.?
*
இவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா..
😂😂😂😂😁

தீபாவளி சைடு எபக்ட்...
*
மனைவி: எனக்கு இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க !!
*
கணவன்: அடியேய் ! துணி எல்லாம் எடுத்து முடிச்சு ,நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்!!
😂😂😂😂

தாத்தா : அந்த காலத்துல ,உன் வயசுல ,நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா ,வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?
*
பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. !எல்லாக் கடையிலேயும் ,நிறைய C C TV காமரா வச்சுருக்காங்க...!
😁😁😁😁😁